கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராகுல் காந்தி !!

ராகுல் காந்தி இனிப்பு வாங்கும் வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்திற்கு வரும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்காக அவர் இனிப்பு வாங்க சென்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிங்காநல்லூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரைத் தாண்டி குதித்து ஒரு ஸ்வீட் கடைக்குள் நுழையும் ராகுல் காந்தி அங்குள்ள ஊழியர் ஊழியர்கள் , கடை உரிமையாளர் ஆகியோருடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இதை தொடர்ந்து யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார் என்று கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கேட்க எனது சகோதரர் ஸ்டாலினுக்காக என்று ராகுல் காந்தி பதிலளிக்கிறார். கடையின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! “என் சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி இந்தியா நிச்சயம் அவருக்கு இனிப்பான வெற்றியை அளிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *