பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு, மாலை அணிவித்து மரியாதை !!

சென்னை
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி ஒத்தகடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அவரைத்தொடர்ந்து முத்தரையரின் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • தமிழையும் தமிழினத்தையும் காக்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.
  • கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
  • வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *