தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் தேர்வு!!

கடப்பா:
தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக சந்​திர​பாபு நாயுடு மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். ஆந்​திர மாநிலம் கடப்​பா​வில் தெலுங்கு தேசம் கட்​சி​யின் மாநாடு நடை​பெற்று வரு​கிறது.

இதில் 2-ம் நாளான நேற்று என்​.டி.​ரா​மா​ரா​வின் பிறந்த நாள் விழா வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. மேலும், அக்​கட்​சி​யின் தேசிய தலை​வ​ராக சந்​திர​பாபு நாயுடு ஒரு​மன​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

அதன் பிறகு சந்​திர​பாபு நாயுடு மாநாட்​டில் பேசி​ய​தாவது: 1995-ம் ஆண்டு முதல் இப்​போது வரை 30 ஆண்​டு​கள் தெலுங்கு தேசம் கட்​சி​யின் தேசிய தலை​வ​ராக உள்​ளேன். இப்​போது மீண்​டும் 2 ஆண்​டு​களுக்கு தலை​வ​ராக நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளேன்.

நீங்​கள் என் மீது வைத்​துள்ள நம்​பிக்​கையை நான் தவறாமல் நிலை நாட்​டு​வேன்.

தெலுங்கு தேசம் கட்​சிக்கு ஒரு வரலாறு உள்​ளது. நக்​ஸலைட்​டு​களை ஒழிக்க தெலுங்கு தேசம் கட்சி போராடியது.

அதே​போல், மாநிலத்​தில் ரவுடிக்​களை ஒழித்​தோம். ராயலசீமா மாவட்​டங்​கள் ஒரு காலத்​தில் வறட்சி மாவட்​டங்​களாக இருந்​தன. ஆனால், அதே ராயலசீ​மா​விற்கு காலேறு – நகரி, ஹந்​திரி-நீவா குடிநீர் கால்​வாய் திட்​டங்​களை கொண்டு வந்​தது தெலுங்​கு தேசம்​ கட்​சி​தான்​. இவ்​​வாறு அவர் பேசி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *