பாகிஸ்தானில் கழுதைகளின் விலை திடீரென அதிகரிப்பு!!

சீனா;
பாகிஸ்தானில் கழுதைகளின் விலை திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் சீனாதான். சீனாவில் கழுதைகளுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்ததே இந்த விலையேற்றத்திற்குக் காரணம்.

சீனாவின் ‘எஜியோ’ (Ejiao) தொழிலுக்காக கழுதை தேவை அதிகரித்துள்ளது. ‘எஜியோ’ என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான ஜெலட்டின் ஆகும்.

கழுதையின் தோலை வேகவைத்து தயாரிக்கப்படும் இந்த ஜெலட்டின், சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கட்டிகள் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவ கடைகளில் இந்த ஜெலட்டின் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக, கழுதைகளை அறுப்பது முதல் தோல் உரிப்பது வரையிலான பெரும்பாலான வேலைகள் பாகிஸ்தானிலேயே நடக்கின்றன. இதற்காக பலுசிஸ்தானில் ஒரு பெரிய கழுதை வதைக்கூடம் கூட திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *