புதுக்கோட்டையில் பொதுமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி!!

புதுக்கோட்டை: ​
தி​முக அரசு 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரு​வ​தால் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டத்தை கொண்டு வந்​துள்​ளது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, புதுக்​கோட்டை அண்ணா சிலை பகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது:

அதி​முக ஆட்​சி​யின்​போது கரோனா பரவல், வறட்​சி, கஜா புயல் பாதிப்பு இருந்​த​போதும் விலை​வாசி கட்​டுக்​குள் இருந்​தது.

ஆனால், திமுக ஆட்​சி​யில் விலை​வாசி பன்​மடங்கு உயர்ந்​து ​விட்​டது. மின் கட்​ட​ணம் 67 சதவீதம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதனால் தமிழகத்​துக்கு வரவேண்​டிய தொழிற்​சாலைகள் அண்டை மாநிலங்​களுக்​குச் சென்​று​விட்​டன. மயி​லாடு​துறை​யில் நேர்மையாகப் பணிபுரிந்த டிஎஸ்பி சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார்.

திருச்​சி​யில் டிஎஸ்பி மன உளைச்சலால் ராஜி​னாமா செய்​யப்​போவ​தாக கூறி​யுள்​ளார். காவல் துறை​யில் பணிபுரிவோருக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது, பொது​மக்​களின் நிலை என்ன? கடந்த 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரப்​போகிறது என்பதற்காக ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்​தைக் கொண்​டு​வந்​துள்​ளனர். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்.

தொடர்ந்​து, திரு​ம​யம், விராலிமலை​யில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். முன்​ன​தாக, புதுக்​கோட்​டை​யில் விவ​சா​யிகள், வணி​கர்​கள், நகைக்​கடை உரிமை​யாளர்​கள், மீனவர்​களை சந்​தித்து கலந்​துரை​யாடி​னார்.

உருட்​டு​களும், திருட்​டு​களும்.. புதுக்​கோட்​டை​யில் ‘உருட்​டு​களும், திருட்​டு​களும்’ என்ற பெயரில் புதிய பிரச்​சா​ரப் பயணத்தை பழனி​சாமி நேற்று தொடங்​கி​வைத்​தார்.

அவர் பேசும்​போது, நீட் தேர்​வு, கல்விக் கடன் ரத்​து, பெட்​ரோல், டீசல் விலை குறைப்​பு, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், ரூ.100 காஸ் மானி​யம், மாதந்​தோறும் மின் கட்​ட​ணம் செலுத்​தும் திட்​டம், படிப்​படி​யாக மது விலக்கு உள்​ளிட்ட பல்​வேறு வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை.

திமுக நிறைவேற்​றாத வாக்​குறு​தி​களை சக்​கர​மாக வைத்து சுழற்​றச் செய்​தும், ஸ்கி​ராட்ச் கார்டு வடி​விலும் புதிய பிரச்​சா​ரத்தை மேற்​கொள்​ள​விருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார். முன்​னாள் அமைச்​சர் சி.​விஜய​பாஸ்​கர் உள்ளிட்​டோர் உடனிருந்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *