பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்கள்!!

சென்னை;
பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்றது.

இந்தப் பொதுக்குழுவில் பா.ம.க. கெளரவத் தலைவர் ஜி.கே. மணி வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள்மொழி, பொதுச்செயலர் முரளிசங்கர், நிர்வாகக் குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக நிறுவனர் ராமதாஸே தேர்வு செய்யப்பட்டதுடன், 37 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அன்புமணி ராமதாஸ்தான் தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.

மேலும், பொதுக்குழுவுக்கு நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலும், அவருக்கு அழைப்பும் விடுக்கப்பட வேண்டும் என்றும் கட்சியின் விதியில் திருத்தம் செய்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்காததற்கு கண்டனம் மற்றும் இட ஒதுக்கீடு வேண்டி மீண்டும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 01 :

  1. கட்சியை வலுப்படுத்துவதற்காக நிறுவனராக இருந்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா ராமதாஸ் கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின்படி கட்சியின் தலைவராக நிர்வாகக் குழு மற்றும் செயற்க்குழு ஆகியவற்றின் முடிவின்படி 30.05.20025 முதல் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் ஆக செயல்படுவார் என்பதை 17.08.2025 இன்றைய மாநில சிறப்பு பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிக்கிறது.

தீர்மானம் 02:

வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,வெற்றிக் கூட்டணியை உருவாக்க மருத்துவர் அய்யா ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

தீர்மானம் 03:

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யா அவர்களின் தீவிர முயற்சியால் கடந்த ஆட்சி காலத்தில் சட்டமாக்கப்பட்டு, தற்பொழுது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

ஏமாற்றத்தையும், அளித்து மிகுந்த வேதனையையும் உருவாக்கி உள்ளதால் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாக பெறுவோம்.

தீர்மானம் 04:

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு அளவை உறுதி செய்ய ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் தட்டிக் கழித்து வருவது கண்டனத்துக்குரியது. சில மாநிலங்களில் நடத்தியது போல உடனே ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தீர்மானம் 05:

தமிழ்நாட்டில் மது விற்பனையால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிகாரர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து குடும்ப பொருளாதாரம், குழந்தைகள் கல்வியும் பாதித்து.

பெண்கள் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் தமிழ் நாட்டின் மக்களை காக்க மதுவை ஒழிக்க முழு மதுவிலக்கு (பூரண மதுவிலக்கு) நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீர்மானம் 06:

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடை இன்றி விற்பனை செய்வதால் மாணவர்கள்.

இளைஞர்கள் என பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.

போதைப் பொருள் ஒழிப்பை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்.

தீர்மானம் 07:

பூம்புகாரில் 10.08.2025 மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கும்,கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சக்திமிக்க சகோதரிகளுக்கும், அனுமதி பாதுகாப்பு வழங்கியவர்களுக்கும், கலை குழுவினருக்கும் பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்…!

தீர்மானம் 08:

“நீரின்றி அமையாது உலகு” என்பதற்கிணங்க மழைக்காலங்களில் காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் உபரி நீர் நூற்றுக்கணக்கான TMC அளவுக்கு கடனுக்கு வீணாகச் செல்கிறது.

இதை தடுத்து முறையாக பயன்படுத்த காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தீர்மானம் 09:

தர்மபுரி பின்தங்கிய மழையளவு குறைந்த, வளமற்ற மாவட்டத்தின் வாழ்வாதார வளர்ச்சிக்கு ஒகேனக்கல் பகுதியிலிருந்து நீரேற்று மூலம் தர்மபுரி – காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானம் 10:

தமிழ்நாடு நீர் ஆதாரத்தில் கடைமடை மாநிலமாகவும், மழையற்ற காலத்தில் வறட்சி மாநிலமாகவும் மாறி குடிநீர் பஞ்சமும், பாசனமும் அற்ற மாநிலமாகவும் அடிக்கடி உருவாகிறது.

இதை போக்க காவிரி -கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *