சென்னை;
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடல்நலக் குறைவால் காலமானார்.
திமுக பொருளாளரும் , மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 80. நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி , சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.