சிங்​ர​வுலி பகு​தி​யில் அரிய வகை மண் தனிமங்கள் கண்டுபிடிப்பு!!

போபால்:
மத்​திய பிரதேச சிங்​ர​வுலி​யில் உள்ள நிலக்​கரி சுரங்க பகு​தி​யில் அரிய மண் தனிமங்​களின் செறி​வு​கள் இருப்​பதை விஞ்​ஞானிகள் கண்​டறிந்​துள்​ளனர்.

இதுகுறித்து மாநில முதன்​மைச் செய​லா​ளர் (சுரங்​கம்) உமா​காந்த் கூறிய​தாவது: சிங்​ர​வுலி பகு​தி​யில் அரிய வகை மண் தனிமங்கள் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது, வெறும் தனிமங்​களைப் பற்​றியது மட்​டுமல்ல. தூய்​மை​யான எரிசக்தி பாது​காப்பு மற்​றும் தொழில்​நுட்​பத்​தில் இந்​தி​யா​வின் எதிர்​காலத்​தைப் பற்​றியது ஆகும்.

நிலக்​கரி துணைப்​பொருட்​களை முக்கிய வளங்​களாக மாற்ற மத்​திய பிரதேச அரசு தயா​ராக உள்​ளது. மேலும் சுய​சார்பு சங்கிலியை உரு​வாக்​கு​வ​தி​லும் இணைந்து செயல்பட சர்​வ​தேச நிறு​வனங்​களுக்கு அழைப்பு விடுக்​கிறோம். இந்த கண்​டு​பிடிப்பு நாட்​டின் புவி​யியல் வலிமையை வெளிப்​படுத்​து​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *