அண்ணாமலை அவரது கட்சிக்காரர் களை உற்சாகப் படுத்தும் வகையில் தூண்டி விட்டாலே போதும் – செல்லூர் கே.ராஜூ !!

மதுரை:
அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம், பாஜக வினரை தூண்டிவிட்டாலே போதும், பழனிசாமி உறுதியாக முதல்வராகி விடுவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செப். 1 முதல் 4-ம் தேதி வரை மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் மேற்கொள்வதையொட்டி மதுரை காளவாசலிலுள்ள மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
மதுரை மண்ணுக்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு எண்ணற்ற திட்டங் களை தந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியை வர வேற்க மக்கள் எழுச்சியோடு உள்ளனர். இதனை அறிந்த திமுக காழ்ப்புணர்ச்சியோடு மதுரை மாநகராட்சியில் பிளக்ஸ் வைக்க கட்டணம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளரை முதல்வர் அரியணையில் ஏற்ற உயிரை கொடுக்க வேண்டாம். ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணாமலை அவரது கட்சிக்காரர்களை உற்சாகப் படுத்தும் வகையில் தூண்டி விட்டாலே போதும், வேண்டு கோள் விடுத்து பேசினாலே போதும். உறுதியாக பழனிசாமி முதல்வராகி விடுவார்.

அதிமுக ஆட்சி மலரப் போகிறது. எப்போது தேர்தல் வரும், பழனிசாமிக்கு வாக் களித்து முதல்வராக்கலாம் என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு விரல் புரட்சி போல் 2026 தேர்தலில் மிகப்பெரிய புரட்சியாக அமையப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *