இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி… – பிரதமர் மோடி!!

ஐஸ்வால்:
வடகிழக்கு மாநிலமான மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி – சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப் பட்டுள்ளது. இதனை காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.13) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், அசாம் மற்றும் மேற்கு வங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடி மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கலிட்டு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “இன்று முதல் இந்திய ரயில்வே வரைபடத்தில் ஐஸ்வாலும் இடம்பெறும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வாலுக்கான ரயில் பாதைக்கான அடிக்கலிடும் பணியை நான் தொடங்கி வைத்தேன்.

இன்று அந்த பணி முடிக்கப்பட்டு தேசத்துக்காக அர்ப்பணித்து வைத்துள்ளோம். பல சவால்களை கடந்து பைரபி – சாய்ரங் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இது நமது பொறியாளர்களின் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பணியும் குறிப்பிடத்தக்கது.

நாம் எல்லோரும் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். இப்போது மிசோரத்தின் சாய்ரங் நேரடியாக டெல்லியோடு ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது வெறும் ரயில் பாதை இணைப்பு மட்டுமல்ல; மாற்றத்துக்கான உயிர்நாடி.

இது மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் சார்ந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் இது வலு சேர்க்கும். சுற்றுலா மேம்படும்.

பல ஆண்டுகளாக நமது நாட்டில் உள்ள சில அரசியல் காட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகின்றன.

அவர்களது கவனம் எல்லாம் எங்கு அதிக வாக்குகள் மற்றும் சீட்டுகள் உள்ளது என்பதில் மட்டும்தான் இருக்கும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. எங்களது அணுகுமுறையே வேறு.

கடந்த 11 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். இந்த பகுதியை இந்தியாவின் வளர்ச்சிக்கான எந்திரமாக அமைந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் உள்ள பல இடங்கள் தேசத்தின் ரயில் பாதை வரடைப்பிடத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த பகுதியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்க தூதுவனாக நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. அது உள்நாடு, வெளிநாடு என்று இல்லை.

மிசோரம் திறன் படைத்த இளைஞர்களால் ஆசீர்வதிக்க பட்டுள்ளது. ஜிஎஸ்டி மறுசீரமைப்பு விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இது குடும்பங்களுக்கு பலன் தரும். நமது நாட்டின் பொருளாதாரம் 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.8% என வளர்ச்சி பெற்றுள்ளது” என்றார்.

அடுத்ததாக பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்துக்கு இன்று பகல் பொழுது செல்கிறார். ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அங்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.

பைரபி – சாய்​ராங் ரயில் பாதை: வடகிழக்கு மாநிலங்​களின் மாற்​றத்​துக்கு இந்​திய ரயில்வே குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்கி வரு​கிறது.

இத்​தகைய திட்​டங்​களில் வடகிழக்கு மாநில​மான மிசோரம் தலைநகரை இணைக்​கும் பைரபி – சாய்​ராங் புதிய பாதை ரயில் திட்​ட​மும் ஒன்​றாகும். மிசோரம் மாநிலம் மியான்​மர், வங்​கதேசம் ஆகிய நாடு​களு​ட​னும் திரிபு​ரா, அஸ்​ஸாம், மணிப்​பூர் ஆகிய மாநிலங்​களு​டனும் எல்​லையை பகிர்ந்து கொள்​கிறது.

இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்​ஸாம் எல்​லை​யில் இருந்து சுமார் 5 கிமீ தொலை​வில் உள்ள பைரபிக்கு மட்​டுமே ரயில் பாதை அமைக்​கப்​பட்டு இருந்​தது.

இதனால் சாலை மார்க்​கத்​தில் செல்ல பெரும் தொகை செல​விடும் நிலை இருந்து வந்​தது. இதையடுத்​து, ரயில் போக்​கு​வரத்தை ஏற்​படுத்​தும் வகை​யில், ரூ.8,071 கோடி​யில் 51.38 கிமீ நீளத்​தில் ரயில் பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் கடந்த 2008-ல் அறிவிக்​கப்​பட்​டது. முதல்​கட்ட பணி​கள் நிறைவடைந்​து, பிர​தான பணி​கள் 2014-ல் தொடங்​கப்​பட்​டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்​வாலை அஸ்​ஸாமில் உள்ள சில்​சா​ருடன் இணைக்​கும் வகை​யில் அமைக்​கப்​பட்​டது.

நாட்​டின் வேறு எந்த ரயில் பாதை​யும் கொண்​டிருக்​காத வகை​யில் 48 சுரங்​கங்​கள், 55 பெரிய பாலங்​கள், 87 சிறிய பாலங்​கள் வழி​யாக ரயில் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், குராங் ஆற்​றின் மீது, 371 மீ நீள​மும், 114 மீ உயர​மும் கொண்ட நாட்​டின் இரண்​டாவது உயர்ந்த ரயில் பால​மாக அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதி​கம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகள​வில் முதலா​வது உயர​மான பால​மாகும்.

இவ்​வாறான கட்​டு​மானங்​கள் மூலம் ரயில்வே பொறி​யியல் வரலாற்​றில் சவால் நிறைந்த பணி​யாக மிசோரம் மாநில ரயில் பாதை மாறி​யுள்​ளது.

பைரபி​யில் தொடங்கி ஹார்​டு​கி, கவ்​னபுய், முகல்​காங், சாய்​ரங் ஆகிய ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *