2-வது நாளாக சென்னையில் எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணி யாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், அதிமுக, திமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் இ.யூ.மு.லீ. கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டி என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சூழலில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

பம்மல் மற்றும் பல்லாவரத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. பம்மல் ‘மார்ஸ்’ ஓட்டல் உரிமையாளர்களில் ஒருவரான ரியாஸ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகரில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவனங்களில் 2ஆம் நாளாக அமலாக்கத்துறை சோதனை பல்லாவரத்தில் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *