இன்று அதிகாலை முதல் அமல் ….. பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

ஆனால், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மெல்ல மெல்ல மீண்டும் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தது. அதனை தொடர்ந்து, பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

663 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இதன்மூலம், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 88 காசுகள் குறைந்து 100 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் குறைந்து 92

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *