கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!!

சென்னை:
கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லோகா’. ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனை புரிந்தது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் கல்யாணி பிரியதர்ஷனுக்கு கிடைத்தது. இதில் அறிமுக இயக்குநர் திரவியம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இப்படத்தை ‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல’ புகழ் வினோத் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலேயே இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *