அனல் மின் நிலைய ஊழியர்​களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்​கிழமை​களில் விடுமுறை அளித்து மின் வாரி​யம் உத்​தரவு பிறப்​பிப்பு​!!

சென்னை:
அனல் மின் நிலைய ஊழியர்​களுக்கு 2-வது மற்றும் 4-வது சனிக்​கிழமை​களில் விடுமுறை அளித்து மின் வாரி​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் அனல், எரி​வாயு சுழலி மின் நிலை​யங்​கள் போன்ற எரிசக்தி ஆதா​ரங்​கள் வாயி​லாக​வும், சூரிய சக்​தி, காற்​றாலை போன்ற மரபு​சாரா ஆற்​றல் வாயி​லாக​வும் மின் உற்​பத்தி செய்து வரு​கிறது.

இவற்​றில் காற்​றாலை, சூரியசக்தி ஆகியவை இயற்கை சார்ந்து இருப்​ப​தால் நிலை​யான உற்​பத்தி இருக்​காது. ஆனால் அனல் மின் நிலை​யங்​களில் நிலை​யான மின் உற்​பத்தி இருக்​கும்.

மின் வாரி​யத்​துக்கு தற்​போது வடசென்​னை, மேட்​டூர், தூத்​துக்​குடி​யில் 5,120 மெகா​வாட் திறனில் 5 அனல் மின் நிலை​யங்​கள் உள்​ளன. அனல் மின் நிலை​யங்​களில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்​கு, அனைத்து சனிக்​கிழமை​யும் வேலை நாளாக உள்​ளது.

ஆனால் வாரிய அலு​வல​கங்​கள், மின் கட்டண மையங்​களுக்​கு, 2-வது சனிக்​கிழமை விடுமுறை​யாக​வும், மற்ற சனிக்​கிழமை வேலை நாளாக​வும் இருந்​தது. கடந்த, 2018 மார்ச் முதல் 4-வது சனிக்​கிழமை​யும் விடுமுறை விடப்​படு​கிறது.

இந்​நிலை​யில் அனல் மின் நிலை​யங்​களில் வழக்​க​மான பணி​களில் உள்​ளவர்​களுக்கு 2-வது மற்​றும் 4-வது சனிக்​கிழமை​களில் விடுமுறை வழங்க வேண்​டும் என தொழிற்​சங்​கங்​கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்​தன.

இந்த கோரிக்​கையை பரிசீலித்த மின் வாரி​யம் அனல் மின் நிலை​யங்​களின் ஊழியர்​களுக்​கும் இனி 2-வது, 4-வது சனிக்​கிழமை விடுமுறை எனவும், காலை 8:30 மணி​முதல் மாலை 5:30 வரை இருந்த பணி நேரத்​தை, மாலை 5:45 மணி வரை நீட்​டிப்​ப​தாக​வும் அறி​வித்​துள்​ளது.

மேலும் குறைந்த அளவில் பணி​யாளர்​கள் பராமரிப்​புப் பணி​களில் சுழற்சி முறை​யில் ஈடு​படலாம். அன்​று பணிக்கு வரு​வோருக்கு மாற்று விடுப்பு மட்​டுமே வழங்​கப்​படும் என்​றும் கூடு​தல் சம்​பளம் வழங்​கப்​ப​டாது எனவும் உத்​தர​வில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *