சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன; யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை – ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்!!

புதுடெல்லி:
தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன.

யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என நம்​பு​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார்.

இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், ”பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம்.

படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலை​யைத் தேடி நான் செல்​வ​தில்​லை.

வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்” என்​றார்.

இந்​தப் பேட்டி சர்ச்சையை ஏற்​படுத்​தி​யது. இவரது கருத்​துக்கு திரை துறையைச் சேர்ந்த பலர் எதி​ரான கருத்​துக்​களை தெரி​வித்​தனர்.

இதற்கு சமூக ஊடகத்​தில் வெளியிட்ட வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய​தாவது:

இசை எப்​போதும் இந்​திய பண்பாட்​டுடன் இணைவதற்​கும், அதை கொண்​டாடு​வதற்​கும், மதிப்​ப​தற்​கு​மான ஒரு வழி​யாகவே எனக்கு இருந்து வரு​கிறது. இந்தி​யா ​தான் எனது ஊக்​கம், என் ஆசான், என் வீடு.

சில நேரங்களில் நோக்​கங்​கள் தவறாகப் புரிந்​து​கொள்​ளப்​ படுகின்றன. ஆனால், இசை​யின் மூலம் முன்​னேறு​வது, மரியாதை செலுத்​து​வதும் சேவை செய்​வதுமே எப்​போதும் என் நோக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

யாரை​யும் புண்​படுத்த வேண்​டும் என நான் ஒரு​போதும் நினைத்ததில்​லை. என் நேர்​மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என்று நம்​பு​கிறேன். நான் இந்​தி​ய​னாக இருப்​ப​தில் பெரு​மிதம் கொள்​கிறேன்.

இது​தான் கருத்து சுதந்​திரத்தை அனு​ம​திக்​கிறது. பல்​வேறு பண்​பாடு​களின் குரல்​களை கொண்​டாட வைக்​கிறது. ஜெய் ஹிந்த், ஜெய் ஹோ. இவ்​வாறு ஏ.ஆர்​.ரஹ்​மான்​ கூறி​யுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *