புதுடெல்லி:
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தென் கொரிய வீராங்கனை அன் சே-யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் வாங் ஜியுடன், தென்கொரியாவின் அன் சே-யங் மோதினர்.
இதில் தென்கொரிய வீராங்கனையின் ஆட்டத்துக்கு வாங்ஜியி-யால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அன் சே-யங் 21-13, 21-11 என எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில், இவர் ஏற்கெனவே 2023-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மொத்தம் 3 முறை இந்திய ஓபன் பாட்மிண்டன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீன தைபேயைச் சேர்ந்த லின் சுன்-யி, இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோனதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.