சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து தொடர்புடைய தனியார் ஒப்பந்த நிறுவனத் திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு!!

கோவை,

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சவுரிபாளையம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து, தொடர்புடைய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமும், மசக்காளிபாளையம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பிற்கு பின்பு சாலையை சீரமைப்பு பணியினை முறையாக மேற்கொள்ளாத சூயஸ் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மாநகராட்சி கமிஷனர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சி, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலமாக வீடுகள் தோறும் மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து பெறப்பட்டு வருகின்றது.

மேலும், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கிழக்கு மண்டலம், வார்டு எண் 53க்கு உட்பட்ட ஜி.வி.ரெசிடென்சி, சவுரிபாளையம் பகுதியில் மாநகராட்சி கமிஷனர், நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து தொடர்புடைய தனியார் ஒப்பந்த நிறுவனத் திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அப்பகுதியிலுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிடவும், பொதுமக்களிடம் அறிவுரை வழங்கி, சாலையோரங்களில் மற்றும் மாநகராட்சி பொது இடங்களில் குப்பைகளை கொட்டாதவாறு சிசிடிவி கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிப்பிற்கு பின்பு சாலையை சீரமைப்பு பணியினை முறையாக மேற்கொள்ளாத சூயஸ் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

முன்னதாக, கிழக்கு மண்டலம், வார்டு எண் 51க்கு உட்பட்ட சவுரிபாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்களின் வருகை பதிவேடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, நகர்நல அலுவலர் மோகன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, உதவி ஆணையர் ராம்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *