சென்​னை​யில் நாய்​களுக்கு கருத்​தடை செய்ய 13 இடங்​களில் மருத்​து​வ​மனைகள்​ – அமைச்சர் நேரு தகவல்!!

சென்னை:
சென்​னை​யில் மட்​டும் 13 இடங்​களில் நாய்​களுக்கு கருத்​தடை செய்ய மருத்​து​வ​மனை​களை உரு​வாக்கி உள்​ள​தாக அமைச்​சர் கே.என்​.நேரு தெரி​வித்​தார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் ஆளுநர் உரை மீதான விவாதத்​தில், அதி​முக உறுப்​பினர் தங்​கமணி பேசும் போது, “தெரு​நாய்​கள் பிரச்​சினை நீடித்​துக் கொண்டே வரு​கிறது. குழந்​தைகளும் இதில் பாதிக்​கப்​படு​வ​தாக தொடர் செய்​தி​கள் வெளிவரு​கின்​றன.

தெரு​நாய் கடிக்கு தக்க பாது​காப்பு வழங்க வேண்​டும்​”என்று கோரிக்கை வைத்​தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்​சர் கே.என்​.நேரு, “நாய்க்​கடி பிரச்​சினை​யில் உச்ச நீதி​மன்ற தீர்ப்பு உள்​ளது.

ஒவ்​வொரு பகு​தி​யில் இருந்​தும் நாய்​களை கொண்டு வந்து கருத்​தடை செய்து பிடித்த இடத்​திலேயே விட வேண்​டுமென அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, சென்​னை​யில் மட்​டும் 13 இடங்​களில் கருத்​தடை செய்ய மருத்​து​வ​மனையை உரு​வாக்கி இருக்​கிறோம்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *