போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் தெற்கு ஆசியாவின் நவீன சிடி ஸ்கேனர் அறிமுகம்!!

சென்னை: ​
போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யில், தெற்கு ஆசி​யா​வின் அதிநவீன வகை சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் கதிரியக்க மற்​றும் பதிவு தொழில்​நுட்ப அறி​வியல் துறை​யில், சிறப்​பான படமெடுப்பு திறனுக்​காக அதிநவீன வசதி​களு​டன் கூடிய ‘ஜிஇ அபெக்ஸ் எலைட் 512 ஸ்பெக்ட்​ரல்’ சிடி ஸ்கேனர் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தெற்கு ஆசி​யா​வில் முதல்​முறை​யாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள இந்த சிடி ஸ்கேனரை, சென்னை மருத்​து​வக் கல்​லூரி​யின் கதிரியக்​க​வியல் துறை முன்​னாள் தலை​வர் டி.எஸ்​.சு​வாமி​நாதன் மற்​றும் ஸ்ரீராமச்​சந்​திரா உயர்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​. வெங்​க​டாசலம் ஆகியோர் தொடங்கி வைத்​தனர்.

இதன் செயல்​பாடு குறித்​து, ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வ​மனை​யின் கதிரியக்​கத் துறை தலை​வர் வெங்​கட​சாய் கூறுகை​யில், “இந்த நவீன சிடி ஸ்கேனர் மூலம் கதிரியக்க படம் பிடித்​தல், பதிவை உரு​வகப்​படுத்​துதல், காட்​சி​யமைத்​தல், நோய் அறிதல் திறனை மேம்​படுத்​துதல், நோயை ஆரம்ப கட்​டத்​திலேயே கண்​டறிதல், நோய்த் தன்​மைக்​கான விளக்​கம், நோய்​களுக்கு ஏற்ப தகுந்த சிகிச்​சையை பரிந்​துரைத்​தல், ஆய்வு செய்​தல் போன்​றவற்றை மிக துல்​லிய​மாக செய்து நோயாளி​களுக்கு தனித்​து​வ​மான சிகிச்சை அளிக்​கலாம்.

அவர்​களுக்​கான பாது​காப்பு வசதி​களை​யும் மேம்​படுத்​தலாம். அதே​போல், உடனடி​யாக கவனிக்க வேண்​டிய பதிவு​களை முதன்​மைப்​படுத்தி நோயாளி​க்​கும், கதிரியக்க பணி​யாளர்​களுக்​கும் கதிர்​வீச்சை குறைத்​து, படத்​தின் தரத்தை உயர்த்தி மருத்​து​வர்​களுக்கு சிறந்த தகவல்​களை அளிக்க முடி​யும்.

சவாலான கதிரியக்க பதிவு​களை ஆராய்ந்து கணிப்​ப​தில் உள்ள சிரமங்​கள் இந்த நவீன வகை இயந்​திரத்​தி​னால் களை​யப்​படும்.

அந்த வகை​யில், கதிரியக்​கத் துறை​யில் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி வாய்ப்​பு​களை மேம்​படுத்​தும் நோக்​கத்​துடன் இந்த நவீன சிடி ஸ்கேனர் பயன்​படுத்​தப்​படும்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில், ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​க​டாசலம், துணை வேந்​தர் உமா சேகர், இணை துணை வேந்​தர் மகேஷ் வக்​க​முடி, மருத்​து​வக் கல்​லூரி தலை​வர் கே.​பாலாஜி சிங், பதி​வாளர் எஸ்​.செந்​தில்​கு​மார், மருத்​துவ இயக்​குநர் ஆர்​.பி.சு​தாகர் சிங், மருத்​துவ கண்​காணிப்​பாளர் பி.சுரேந்​திரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *