டி20 தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!!

துபாய்:
ஆப்கானிஸ்தான் – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிகள் இடையி​லான 2-வது டி20 கிரிக்​கெட் போட்டி நேற்று முன்​தினம் இரவு துபா​யில் நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 189 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக டார்​விஷ் ரசூலி 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்டரிகளு​டன் 68 ரன்​களும், செதி​யுல்லா டேல் 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 53 ரன்​களும் சேர்த்​தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் மேத்யூ ஃபோர்டு 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார்.

190 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவுகள் அணி 18.5 ஓவர்​களில் 150 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் பிரண்​டன் கிங் 50, ஷிம்​ரன் ஹெட்மயர் 46 ரன்​கள் சேர்த்​தனர். 39 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆப்​கானிஸ்​தான் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரை 2-0 என தன்​வசப்​படுத்​தி​யது.

முதல் போட்​டி​யில் ஆப்​கானிஸ்​தான் அணி 38 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான​ டி20 தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *