மரணத்​துக்​குப் பின்​னரும் தனது எஜமானர்​களுக்கு காவல் காத்த வளர்ப்பு நாய்!!

சிம்லா:
இமாச்​சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்​டம் பார்​மர் பகு​தி​யைச் சேர்ந்​தவர் பிக்​சித் ராணா. இவரது உறவினர் பியூஷ்.

இவர்​கள் நீண்ட நாட்​களாக பிட்​புல் வகை நாயை வளர்த்து வந்​தனர். இவர்​கள் அண்​மை​யில் பார்​மர் பகு​தி​யிலுள்ள பார்​மணி கோயி​லில் வீடியோ எடுப்​ப​தற்​காக சென்​றிருந்​தனர்.

கடந்த சில நாட்​களாக இப்​பகு​தி​யில் கடும் பனிப்​பொழிவு இருந்​தது. வீடியோ எடுக்​கும் ஆர்​வத்​தில் இரு​வரும் இந்​தப் பனிப்​பொழி​வில் சிக்​கி​விட்​டனர்.

இவர்​களால் அந்​தப் பனியி​லிருந்து மீண்டு வரமுடிய​வில்​லை. இவர்​களைக் காணா​மல் உறவினர் தேடி வந்​தனர்.

இதுதொடர்​பாக போலீ​ஸாரிடம் புகார் தரப்​பட்​டது. போலீ​ஸாரும், மீட்​புப்​படை​யினரும் தேடு​தல் பணி​யில் ஈடு​பட்​ட​போது அவர்​களது சடலங்​கள் பார்​மணி கோயில் அருகே கிடைத்​தன.

அப்​போது பிக்​சித் ராணா, பியூஷ் சடலங்​களுக்கு அரு​கிலேயே அவர்​கள் வளர்த்த நாய் காவல் காத்​துக் கொண்​டிருந்​தது தெரிய​வந்​தது.

கடும் குளிர், அதிக அளவில் பனிப்​பொழிவு இருந்​த​போதும் 4 நாட்​களாக சடலங்​களை விட்டு அகலாமல் அந்த நாய் அங்​கேயே நின்று கொண்​டிருந்​தது.

இது பார்ப்​பவர்​களின் நெஞ்சை உருக்​கு​வ​தாக இருந்​தது. தொடக்​கத்​தில் தனது எஜமானர்​களின் உடல் அரு​கே, மீட்​புப்​படை​யினரை செல்​லப்​பி​ராணி​யான நாய் விட மறுத்​தது.

அவர்​கள் அந்த உடலுக்கு ஏதாவது தீங்கு செய்து விடு​வரோ என்ற பயத்​தில் அந்த வாயில்​லாப் பிராணி பாது​காத்​தது.

அதன் பின்​னர் எஜமானர்​களின் உடலுக்கு தீங்​கிழைக்க மாட்​டார்​கள் என்​பதும், உடலை எடுத்​துச் செல்​லவே அவர்​கள் வந்​துள்​ளனர் என்​ப​தை​யும் புரிந்​து​கொண்ட செல்​லப்​பி​ராணி ஒத்​துழைப்பு கொடுத்​தது.

இந்த நெகிழ்ச்​சி​யான கதை அந்த சம்​பவத்​தைப் பார்த்த பலரின் கண்​களில் கண்​ணீரை வரவழைத்​தது.

மரணத்​துக்​குப் பின்​னரும் தனது எஜமானர்​களுக்கு காவல் காத்த அந்த விலங்​கின் அன்​பை​யும், விசு​வாசத்​தை​யும் புரிந்​து​கொண்​ட அப்​பகு​தி மக்​கள்​ கண்​ணீர்​ விட்​டு அழுதனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *