இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் எரிசக்தி துறை​யில் உள்ள ரூ.46 லட்​சம் கோடி முதலீட்டு வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு உலக முதலீட்​டாளர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு!!

புதுடெல்லி:
இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் எரிசக்தி துறை​யில் உள்ள ரூ.46 லட்​சம் கோடி முதலீட்டு வாய்ப்பை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு உலக முதலீட்​டாளர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று அழைப்பு விடுத்​தார்.

இந்​தியா எரிசக்தி வாரம் 2026 என்ற நிகழ்ச்சி கோவா மாநிலம் பனாஜி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி மூலம் பங்​கேற்று பேசி​ய​தாவது: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் எண்​ணெய் மற்​றும் எரி​வாயு துறை​யில் ரூ.9.1 லட்​சம் கோடி முதலீடு​களை ஈர்க்க இந்​தியா இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

ஆண்​டுக்கு 26 கோடி டன்​னாக உள்ள நாட்​டின் எண்​ணெய் சுத்​தி​கரிப்​புத் திறன் 30 கோடி டன்​னாக உயர்த்​தப்​படும்.

இந்​திய எரிசக்தி துறை எங்​களது லட்​சி​யங்​களின் மையப்​புள்​ளி​யாக உள்​ளது. இது ரூ.45.8 லட்​சம் கோடி மதிப்​பிலான முதலீட்டு வாய்ப்​பு​களை வழங்​கு​கிறது. எனவே, இந்த வாய்ப்பை உலக முதலீட்​டாளர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

இந்​தி​யா​வில் தயாரி​யுங்​கள், இந்​தி​யா​வில் புது​மை​களைப் புகுத்​துங்​கள், இந்​தி​யா​வுடன் இணைந்து வளருங்​கள், இந்​தி​யா​வில் முதலீடு செய்​யுங்​கள் என்​பது​தான் என் கோரிக்​கை.

எரிசக்தி துறை​யில் உலகின் முதல் ஐந்து ஏற்​றும​தி​யாளர்​களில் இந்​தியா இடம் பிடித்​துள்​ளது.

எரிசக்​தித் துறையைப் பற்றி கூற வேண்​டுமென்​றால், அதன் மதிப்​புச் சங்​கிலி முழு​வதும் மகத்​தான முதலீட்டு வாய்ப்​பு​கள் உள்​ளன.

உதா​ரண​மாக, ஆய்​வுத் துறையை எடுத்​துக் கொண்​டால், இந்​தியா அதைப் பெரு​மள​வில் திறந்​து​விட்​டுள்​ளதுஆழ்​கடல் ஆய்வு முயற்​சிகளான ‘சமுத்ர மந்​தன்’ திட்​டம் குறித்து நீங்​கள் அறிவீர்​கள்.

இந்த தசாப்​தத்​தின் இறு​திக்​குள், எங்​களது எண்​ணெய் மற்​றும் எரி​வாயு முதலீடு​களை ரூ.9.1 லட்​சம் கோடி​யாக உயர்த்த முயற்சி செய்து வரு​கிறோம்.

எண்​ணெய் மற்​றும் எரி​வாயு ஆய்​வுப் பரப்பை 10 லட்​சம் சதுர கிலோமீட்​ட​ராக விரிவுபடுத்​து​வதே எங்​கள் நோக்​கம். இதற்​காக ஏற்​க​னவே 170-க்​கும் மேற்​பட்ட பிளாக்​கு​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

அந்​த​மான் நிக்​கோ​பார் வடிநிலம் நமது அடுத்த ஹைட்​ரோ​கார்​பன் நம்​பிக்​கை​யாக உரு​வெடுத்து வரு​கிறது.

முந்​தைய எரிசக்தி வார நிகழ்ச்​சி​யில் அளிக்​கப்​பட்ட பரிந்​துரைகளின்​படி, விதி​முறை​களில் மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ஆய்​வுத் துறை​யில் முதலீடு செய்​தால் உங்​கள் நிறு​வனத்​தின் லாபம் அதி​கரிப்​பது உறு​தி.

எல்​என்​ஜி, கப்​பல் கட்​டும் துறைதிர​வ​மய​மாக்​கப்​பட்ட எரி​வா​யுக்​கான (எல்​என்​ஜி) தேவை அதி​கரித்து வரு​கிறது.

இந்​தியா தனது மொத்த எரிசக்தி தேவை​யில் 15 சதவீதத்தை எல்​என்ஜி மூலம் பூர்த்தி செய்ய இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

இதற்​காக எல்​என்ஜி போக்​கு​வரத்​துக்​குத் தேவை​யான கப்​பல்​களை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

சமீபத்​தில் கப்​பல் கட்​டும் திட்​டத்​துக்​காக ரூ.70,000 கோடி மதிப்​பிலான திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *