தைப்பூசம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு வெள்​ளி, சனிக்​கிழமை​களில் 1,005 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்!!

சென்னை:
தைப்பூசம், வார இறுதி நாட்​களை முன்​னிட்டு வெள்​ளி, சனிக்​கிழமை​களில் 1,005 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்​துத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஜன.30-ம் தேதி (வெள்​ளி), 31-ம் தேதி (சனி) மற்​றும் பிப்​.1-ம் தேதி (ஞா​யிறு) வார விடு​முறை நாட்​கள் மற்​றும் தைப்​பூசத்தை முன்​னிட்டு சென்​னையி​லிருந்து இதர இடங்​களுக்​கும் மற்​றும் பிற இடங்​களி​லிருந்​தும் கூடு​தலான பயணி​கள் தமிழகம் முழு​வதும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதைக் கருத்​தில்​கொண்டு தினசரி இயக்​கப்​படும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு 30-ம் தேதி 360 பேருந்​துகளும், 31-ம் தேதி 485 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு வெள்​ளிக்​கிழமை 60 பேருந்​துகளும், சனிக்​கிழமை 60 பேருந்​துகளும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

மாதவரத்​திலிருந்து வெள்​ளியன்று 20 பேருந்​துகளும், சனிக்​கிழமை 20 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

அதே​போல், பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு மற்​றும் கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

ஞாயிற்​றுக்​கிழமை சொந்த ஊர்​களில் இருந்து சென்னை, பெங்​களூரு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்​கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, வெள்​ளிக்​கிழமை பயணம் செய்ய 4,132 பேரும், சனிக்​கிழமையன்று 4,175 பேரும், ஞாயிற்​றுக்​கிழமையன்று 8,256 பேரும் பயணம் மேற்​கொள்ள முன்​ப​திவு செய்​துள்​ளனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *