ம​காத்மா காந்​தி​யின் 79-வது நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை !!

சென்னை:
ம​காத்மா காந்​தி​யின் 79-வது நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர்.

நாடு முழு​வதும் மகாத்மா காந்​தி​யின் 79-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி கிண்டி காந்தி மண்​டபத்​தில் உள்ள சிலைக்கு அருகே அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

எழும்​பூர் அருங்​காட்​சி​யகத்​தில் உள்ள காந்தி சிலைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மாலை அணி​வித்​து, அவரது படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

முதல்​வரை தொடர்ந்து துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள். எம்​எல்​ஏக்​கள், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் மற்​றும் அரசு உயர​தி​காரி​கள் மரி​யாதை செலுத்​தினர். இதையடுத்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் தீண்​டாமை ஒழிப்பு உறு​தி​மொழி ஏற்​கப்​பட்​டது.

இதே​போல், தமிழக காங்​கிரஸ் தலைமை அலு​வல​க​மான சத்​தி​யமூர்த்​திபவனில் கட்​சி​யின் முன்​னாள் மாநில தலை​வர் கே.வீ.தங்​க​பாலு தலை​மை​யில் காந்​தி​யின் படத்​துக்கு நிர்​வாகி​கள் மரி​யாதை செலுத்தி தீண்​டாமை ஒழிப்பு உறு​தி​மொழி எடுத்​துக்​கொண்​டனர்.

காந்​தி​யின் நினை​வு​தினத்​தையொட்டி தலை​வர்​கள் தெரி​வித்​துள்​ள​தாவது:

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: உண்​மை, அகிம்சை மற்​றும் தன்​னலமற்ற சேவை​யின் வழி​காட்​டி​யான காந்​தி​யின் நினைவு நாளில் அவருக்கு அஞ்​சலி செலுத்​து​வோம்.

தியாகம், சத்​தி​யாகிரகம் மற்​றும் தார்​மீக துணிச்​சல் நிறைந்த அவரது வாழ்க்கை தேசத்​தின் உணர்வை தட்​டி​ யெழுப்​பி, ஒடுக்​கப்​பட்ட மக்​களை மேம்​படுத்​தி​யது.

காந்​தி​யின் லட்​சி​யங்​களை பின்​பற்றி நீதி சார்ந்த, கருணை, அனை​வரை​யும் உள்​ளடக்​கிய ஆன்​மிகம் மற்​றும் கலாச்​சார மரபு​களில் அவர் கனவு கண்ட இந்​தி​யாவை உரு​வாக்​கு​வோம்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: அமைதி வழி​யின் வலிமையை உலகுக்கு காட்​டி, ஒற்​றுமை​யுணர்வு தழைக்க பாடு​பட்​ட​தால் கோட்​சே​வின் துப்​பாக்கி குண்​டு​களால் துளைக்​கப்​பட்ட மகாத்மா காந்​தி, ஒவ்​வொரு இந்​தி​யரின் உள்​ளத்​தி​லும் நிலைத்து வாழ்​வார். மகாத்​மாவை மறைத்​து, நாட்டை நாசப்​படுத்த துடிக்​கும் கோட்​சே​வின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்​டி, காந்தி பிறந்த மண்ணை காத்​திடு​வோம்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, அகிம்​சை​யும், உண்​மை​யும்​தான் உலகத்தை மாற்​றும் என்ற நம்​பிக்​கையோடு, நம் நாட்​டின் கொள்கை வழி​காட்​டி​யாக விளங்​கும் மகாத்மா காந்​தி​யின் நினைவு நாளில், மனித நே​யத்​தின் உயர்ந்த சின்​ன​மான அவரது தியாக பெரு​வாழ்வை போற்றி வணங்​கு​கிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: காந்​தி​யின் நினைவு நாளில், அவரது லட்​சிய கனவான கிராம முன்​னேற்​றம், விவ​சாய வளர்ச்​சி, தற்​சார்பு கொள்​கை, தூய்மை பாரதம் போன்​றவற்றை கொண்ட ராம ராஜ்ஜி​யம் கனவை நினை​வாக்கி நடை​முறைப்​படுத்தி வரும் பிரதமர் மோடி தலை​மை​யில், காந்​தி​யின் லட்​சி​யங்​கள் மேன்​மேலும் நிறைவேற உறு​தி​யேற்​போம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: எளிமை, கொள்கை தெளிவு, நேர்​மை​யான பார்வை ஆகிய​வற்​றோடு சாதி, மத, பேதமற்ற சமு​தா​யத்​துக்​காக​வும், மானுட நலனுக்​காக​வும் தன் வாழ்​நாள் முழு​வதும் உழைத்த காந்​தி​யின் நினைவை எந்​நாளும் போற்​றிடுவோம்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *