நாகதோஷ நீங்க சிறப்பு வழிபாடு!!

வெற்றி வேலாயுத சுவாமி கோவிலின் கீழ் தென் கிழக்குப்பக்கம் பாம்பு புற்றுக்குத் தனிக்கோவில் அமைந்துள்ளது. பல புற்றுக்கண்களை உள்ளடக்கிய அப்புற்றில் தெய்வீக நாகம் குடிகொண்டுள்ளது.

உத்திராயண காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தில் அப்புற்று வளர்வதும், தட்சிணாயன காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான காலத்தில் அப்புற்று தேய்வதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் அதிசயம் ஆகும்.

அப்புற்றை சுப்பராயர் என்று அழைக்கின்றனர். அப்பாம்பு புற்று மயில் போலக்காட்சி அளிக்கிறது.

அப்புற்றின் மேற்புறம் இரண்டு நாகச்சிற்பங்கள் உள்ளன. வெளியில் நாகர் சிற்பமும், வேலும் உள்ளன. இது மயூரகிரிச் சித்தரின் ஜீவசமாதியாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

அமாவாசை தினங்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கதித்தமலையானை வழிபடும் முன்பு சுப்பராயர் சன்னதியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

நாகதோஷம், ராகு-கேது தோஷம் ஆகியன நீங்க சிறப்பு வழிபாடும் செய்கின்றார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *