கோவையில் முள்​கம்பி வேலி​யில் சிறுத்தை சிக்கி உயிரிழப்பு!!

கோவை:
கோவை மாவட்ட எல்​லை​யில் உள்ள வாளை​யாறு, மொட​மாத்​தி, சின்​னாம்​பதி உள்​ளிட்ட வனப்​பகு​தி​களில் அதிக அளவி​லான சிறுத்தைகள் வாழ்ந்து வரு​கின்​றன. இவை உணவுக்​காக வனத்தை விட்டு வெளி​யேறும்.

மேலும், வன எல்லை கிராமங்​களில் வீடு​களில் மக்​கள் வளர்க்​கும் ஆடு, கோழிகளை அவ்​வப்​போது வேட்​டை​யாடு​வது வழக்​கம்.

இந்​நிலை​யில், மதுக்​கரை வனச்​சரகம் மொட​மாத்தி அருகே ஐயன்​பாதி பகு​தி​யில் உள்ள தனி​யாருக்கு சொந்​த​மான பட்டா நிலத்​தில் நேற்று சிறுத்தை ஒன்று வந்​துள்​ளது. அப்​போது, அங்​கிருந்த முள்​கம்பி வேலி​யில் சிறுத்தை சிக்கி உயி​ரிழந்​தது.

இதை பார்த்த அப்​பகுதி மக்​கள் மதுக்​கரை வனத்​துறை​யினருக்கு தகவல் அளித்​தனர். அதன்​பேரில் அங்கு சென்ற வனத்​துறை​யினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு விசா​ரணை நடத்​தினர்.

இதில், கம்​பிவேலி​யில் சிக்கி இறந்து கிடத்​தது 2 வயதுடைய பெண் சிறுத்தை என்​பது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக வனத்​துறை​யினர் கூறும்​போது, “வனத்தை விட்டு வெளியே வந்த சிறுத்தை, கம்​பிவேலி​யில் சிக்கி உயி​ரிழந்​துள்​ளது.

அதே இடத்​தில் உடற்​கூறாய்வு செய்​யப்​பட்​டது. வன கால்​நடை மருத்​து​வர்​களின் அறிக்​கை​யின் முடி​வில் ​தான் சிறுத்தை உயி​ரிழப்​புக்​கான காரணம் தெரிய​வரும்” என்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *