67 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில், ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி!! ஜம்மு-காஷ்மீர் முதல்வர்…..

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளில் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது. இதனையடுத்து கர்நாடகா முதல் இன்னிங்ஸில் 293 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

67 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில், ஜம்மு காஷ்மீர் அணி முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது மிகப்பெரிய தருணம். இதற்கு முன்பு எங்களால் இந்த நிலையை எட்ட முடியாது என்று பலர் கூறினர். ஆனால், முதல் இன்னிங்ஸில் வீரர்கள் விளையாடிய விதம், நாம் கண்டிப்பாகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

எங்கள் வீரர்கள் இந்திய தேசிய அணிக்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய அல்லது கேட்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்.

என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *