திருச்​சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்​திர மோடி ரூ.5,655 கோடி மதிப்​பீட்​டிலான நலத் திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்!!

திருச்சி: ​
திருச்​சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்​திர மோடி ரூ.5,655 கோடி மதிப்​பீட்​டிலான நலத் திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்.

தொடர்ந்​து, பஞ்​சப்​பூரில் இருந்து விமான நிலை​யம் வரை 10 கி.மீ. தொலை​வுக்கு நடை​பெறும் பிரதமரின் பிரம்​மாண்ட ரோடு ஷோவில் பல லட்​சம்பேர் பங்​கேற்க உள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி, கேரளம் மாநிலம் கொச்​சி​யில் இருந்து ராணுவத்​துக்​குச் சொந்​த​மான விமானம் மூலம் இன்று (மார்ச் 11) மாலை 5 மணி​யள​வில் திருச்சி விமான நிலை​யத்​துக்கு வருகை தரு​கிறார்.

அங்​கிருந்து 5.15 மணிக்கு ஹெலி​காப்​டர் மூலம் புறப்​பட்டு பஞ்​சப்​பூர் புதிய பேருந்து முனை​யம் அருகே எடமலைப்​பட்டி புதூரில் அமைந்த ஹெலிபேடில் இறங்​கு​கிறார்.

அங்கு நடை​பெறும் அரசு விழாவில், சென்னை மணலி​யில் அமைந்​துள்ள இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் லிமிடெட்​டின் உயவு எண்​ணெய் கலவை ஆலை, நீல​கிரி மற்​றும் ஈரோடு மாவட்​டங்​களில் பாரத் பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட்​டின் நகர எரி​வாயு விநி​யோகத் திட்​டங்​கள், தமிழ்​நாடு முழு​வதும் 370.52 கி.மீ. நீள​முள்ள பாரத பிரதமரின் கிராமப்​புறச் சாலைகள், கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் புறவழிச் சாலை அமைக்​கும் பணி உள்​ளிட்ட ரூ.5,655 கோடிக்​கும் அதி​க​மான வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைக்​கிறார்.

மேலும், ராமேசுவரம்- மங்​களூரு விரைவு ரயில், நாகர்​கோ​வில்- சார்​லப்​பள்ளி அம்​ரித் பாரத் விரைவு ரயில், போத்​தனூர் (கோவை)- தன்​பாத் அம்​ரித் பாரத் விரைவு ரயில், திருநெல்​வேலி- மங்​களூரு சந்​திப்பு விரைவு ரயில், மயி​லாடு​துறை-காரைக்​குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவை​களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்​கிறார்.

அதன்​பிறகு, அதேபகு​தி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் அரசி​யல் பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி சிறப்​புரை ஆற்​றுகிறார்.

இந்த பொதுக்​கூட்​டத்​தில், அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், பாமக தலை​வர் அன்​புமணி, ஐஜேகே தலை​வர் பாரிவேந்​தர், புதிய நீதிக்​கட்​சி​யின் சண்​முகம், முத்​தரையர் முன்​னேற்​றச் சங்​கத்​தின் ஆர்​.​விஸ்​வ​நாதன் உட்பட கூட்​டணி கட்​சித் தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

பொதுக்​கூட்​டம் நிறைவடைந்த பின்​னர், மாலை 6.45 மணி​யள​வில் பிரதமர் அங்​கிருந்துகார் மூலம் புறப்​பட்டு பஞ்​சப்​பூர், எடமலைப்​பட்​டி புதூர், சிறப்பு காவல்​படை முகாம், மன்​னார்​புரம் நான்கு சாலை, டிவிஎஸ் டோல்​கேட் வழி​யாக விமான நிலை​யம் வரை மொத்​தம் 10 கி.மீ. தொலை​வுக்கு நடை பெறும் ரோடு ஷோவில் பங்​கேற்​கிறார்.

இரவு 8 மணி​யள​வில் விமான நிலை​யம் செல்​லும் பிரதமர், அங்​கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்​பட்​டுச் செல்​கிறார். இதையொட்​டி, திருச்சி மாநகரில் 3,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்தப்பட்டுள்ளனர்.

உச்​சபட்ச பாது​காப்பு

பிரதமரின் திருச்சி வரு​கை​யையொட்​டி, அவரது விமானம் நேற்று 2 முறை திருச்சி விமான நிலை​யத்​தில் தரை​யிறங்கி பாது​காப்பு ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டது. அதே​போல, ஹெலிபேடிலும் ஒரே மாதிரி​யான 3 ஹெலி​காப்​டர்​கள் தரை​யிறங்கி ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டன.

மத்​திய, மாநில காவல் துறை​யினர் வாகன அணிவகுப்பு ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டனர். இசட் பிரிவு பாதுகாப்பு என்பதால் மத்​திய தொழிற்​பாது​காப்பு படை, மாநகர காவல்​துறை என திருச்சி மாநகரம் முழு​வதும் உச்​சபட்ச பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *