லால்​குடி தொகுதி தவெக வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள முன்னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்!!

திருச்சி:
திருச்சி மாவட்​டம் லால்​குடி அருகே உள்ள மழவனூரில் உள்ள ஒரு வீட்​டில் வாக்​காளர்​களுக்கு விநி​யோகிப்​ப​தற்​காக அதி​கள​வில் பணம் பதுக்கி வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக தேர்​தல் பறக்​கும் படை அலு​வலர்​களுக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்து லால்குடி தொகுதி உதவி தேர்​தல் நடத்​தும் அலு​வலரும், வட்​டாட்​சி​யரு​மான தமிழ்ச்​செல்​வன் தலை​மையி​லான குழு​வினர் நேற்று முன்​தினம் இரவு மழவனூரில் உள்ள நீலமேகம் என்​பவரது வீட்​டில் சோதனை நடத்​தினர்.

அப்​போது வீட்​டில் கட்​டுக்​கட்​டாக ரொக்​கப் பணம் இருப்​பது தெரிய​வந்​தது. அந்​தப் பணம் ரூ.10 லட்​சத்​துக்கு மேல் இருக்​கும் என்​ப​தால் வரு​மானவரித்​துறை​யினருக்கு தகவல் கொடுத்​தனர்.

உடனடி​யாக அங்கு வந்த வரு​மான வரித்​துறை​யினர் ரூ.50 லட்​சத்தை பறி​முதல் செய்​தனர்.

அந்​தப் பணத்​துக்கு எவ்​வித ஆவணங்​களும் இல்​லாத​தால் நீலமேகம், அவரது மகன் அரவிந்த் ஆகியோரிடம் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

வீட்​டில் பணத்தை பதுக்கி வைத்​திருந்த நீலமேகம், லால்​குடி தொகுதி தவெக வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள முன்னாள் அமைச்​சர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *