ராப்பிடோ, ஓலா , உபர் போன்ற பைக் ட்ராக்ஸிகளின் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ளனர்.
ராப்பிடோ, ஓலா ,உபர் போன்ற போன்ற டாக்ஸி நிறுவனங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அத்துடன் சென்னையில் இருக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக இயக்கப்படும் பைக் டாக்ஸி சேவைகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்துள்ள நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.