நான் இப்​படித்​தான் விளை​யாடு​வேன், இதையே​தான் செய்​வேன் என்று முன்​கூட்​டியே ஒரு எண்​ணத்​துடனோ அல்​லது திட்​ட​மிட்ட மனநிலை​யுடனோ வர வேண்​டிய அவசி​யமில்​லை – சஞ்சு சாம்சன்!!

மும்பை:
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 103 ரன்​கள் வித்தியாசத்தில் தோற்​கடித்து அசத்​தி​யது சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்​தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்​புக்கு 207 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 54 பந்​துகளில் 101 ரன்​கள் விளாசி மிரட்​டி​னார். 208 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்​களில் 104 ரன்​களுக்கு சுருண்​டது.

அதி​கபட்​ச​மாக திலக் வர்மா 37, சூர்​யகு​மார் யாதவ் 36 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற அனைத்து பேட்​ஸ்​மேன்​களும் ஒற்றை இலக்க ரன்​னில் நடையை கட்​டினர்.

சிஎஸ்கே அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் வாயி​லாக சிஎஸ்கே அணி 8 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 5-வது இடத்​துக்கு முன்​னேறியது.

ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்​சன் கூறிய​தாவது: நான் விஷ​யங்​களை எளிமை​யாக வைத்​திருக்க முயற்சி செய்​கிறேன்.

வான்​கடே ஆடு​களம் வழக்​க​மானது போன்று இல்​லை. பந்து சற்று நின்று வந்​தது. எனவே, அந்​தச் சூழலில் இருந்து அணிக்கு என்ன தேவை என்​பதை மதிப்​பிடு​வதே எனது வேலை​யாக இருந்​தது.

நாங்​கள் சில விக்​கெட்​டு​களைத் தொடர்ந்து இழந்து கொண்​டிருந்​தோம், எனவே நிலைத்து நின்று விளை​யாடும் ஒரு பேட்​ஸ்​மேன் களத்​தில் இருக்க வேண்​டியது அவசி​யம் என்று நான் நினைத்​தேன்.

அதையே நான் செய்ய முயற்​சித்​தேன். அது சரி​யாக நடந்​தது. ஆட்​டம் எதைச் செய்ய வேண்​டும் என்று உங்​களுக்​குச் சொல்​லிக் கொடுக்​கும்.

நான் இப்​படித்​தான் விளை​யாடு​வேன், இதையே​தான் செய்​வேன் என்று முன்​கூட்​டியே ஒரு எண்​ணத்​துடனோ அல்​லது திட்​ட​மிட்ட மனநிலை​யுடனோ வர வேண்​டிய அவசி​யமில்​லை.

ஆட்​டத்​தின் சூழ்​நிலை​யை​யும், அணிக்கு எது தேவை என்​ப​தை​யும் புரிந்​து​கொண்​டு, அதற்கு ஏற்​ற​வாறு திட்​ட​மிட்டு விளை​யாடு​வதே எனது பொறுப்​பு.

விக்​கெட்​டு​கள் அடுத்​தடுத்து விழாமல் இருந்​திருந்​தால், நான் இன்​னும் சற்று முன்​ன​தாகவே அதிரடி​யாக விளை​யாடத் தொடங்​கி​யிருப்​பேன்.

ஆனால், விக்​கெட்​டு​கள் சரிந்​த​தால், இன்​னிங்ஸை சிறப்​பாக முடித்​துக் கொடுக்க வேண்​டியது அவசி​ய​மான​தாக இருந்​தது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *