முதல்​வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட உத்​தரவிட்டிருந்த நிலையில், பெரும்​பான்​மை​யான கடைகள் மூடப்​பட​வில்லை – அன்புமணி குற்றச்சாட்டு!!

சென்னை:
பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்​கையில் கூறியுள்ளதாவது:

முதல்​வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட உத்​தரவிட்டிருந்த நிலையில், பெரும்​பான்​மை​யான கடைகள் மூடப்​பட​வில்லை என்று செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இது உண்​மை​யாக இருந்​தால், இந்த விஷ​யத்​தில் அரசின் நடவடிக்​கைகள் மிகுந்த ஏமாற்​றமளிப்பதாக உள்ளன.

எனவே, எத்​தனை மதுக்​கடைகள் கடந்த 26-ம் தேதிக்​குள் மூடப்​பட்டன என்​பதை தமிழக அரசு தெரிவிக்க வேண்​டும்.

அவற்​றில் இது​வரை மூடப்​ப​டாத மதுக்​கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இவை அனைத்​துக்​கும் மேலாக இப்​போது மூடப்​படும் 717 மதுக்​கடைகளும் வேறு இடங்​களில் திறக்​கப்​ப​டா​மல் இருப்​பதை அரசு உறு​தி​செய்ய வேண்​டும் என்று அவர் தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *