”பித்தத்தால் ஏற்படும் பல நோய்களை சரி செய்ய உதவும் இஞ்சி”!!

பொதுவாக நாம் அன்றாடம் சமையளில் சேர்த்து கொள்ளும் இஞ்சிக்குள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த ஆரோக்கியம் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1.பித்தத்தால் ஏற்படும் பல நோய்களை இஞ்சி சரி செய்கிறது.

2.மேலும் அதிகமாக சாப்பிட்டதும் ஏற்படும் நெஞ்செரிச்சல் முதல் அனைத்து வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு இஞ்சி கஷாயம் வச்சி குடித்தல் சிறந்த பயனை கொடுக்கும் .

3.மேலும் ஜலதோஷத்திற்கு இஞ்சி எப்போதுமே முதலிடத்தில் உள்ளது.

4.அந்த சளி நேரத்தில் இஞ்சியை சாப்பிடுவது தனிநபரின் சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, ஜலதோஷம் போன்ற சுவாச வைரஸ்களிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும்.

5.செரிமான பிரச்சினைகள் மற்றும் வயிற்று வலி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க இஞ்சி எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

6.மேலும், நமக்கு உண்டாகும் வாந்தியைக் குறைக்கவும், அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகு இது நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

7.இஞ்சி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்புக்கு வழி செய்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *