இந்திய அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!!

புதுடெல்லி:
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் வரும் 13, 15 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக் கப்பட்டது.

இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா மற்றும் ஆல் ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் 4 பேரும் முழு உடற்குதியை எட்டினால் மட்டுமே விளையாடுவார்கள் என தெரிவிக்கபபட்டுள்ளது.

அணி விவரம்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *