உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!!

உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துக் கூறும் மக்களாட்சியின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையின் அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள் என்று அனைத்து பத்திரிக்கைத் துறை நண்பர்களையும் கேட்டு கொண்டு , உலக பத்திரிக்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *