அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றுவதற்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ள 4,500 லிட்டர் நெய்!!

திரு​வண்​ணா​மலை:
அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீபத் திரு​விழா வரும் 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது.

தொடர்ந்து நடை​பெறும் 10 நாட்​கள் விழா​வின் முக்​கிய நிகழ்​வான பரணி தீபம் டிச. 3-ம் தேதி அதி​காலை ஏற்​றப்​படு​கிறது.

அன்று மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பின்​புறம் 2,668 அடி உயர​முள்ள தீபமலை உச்​சி​யில் மகா தீபம் ஏற்​றப்​படும்.

மகா தீபம் ஏற்​று​வதற்​காக 1,500 மீட்​டர் காடாதுணி, 4,500 கிலோ நெய் பயன்​படுத்​தப்​படும்.

இந்த மகா தீபம் 11 நாட்​கள் பக்​தர்​களுக்கு காட்சி அளிக்கும். இந்​நிலை​யில், மகா தீபம் ஏற்​று​வதற்​காக கோயில் நிர்​வாகம் சார்​பில் ஆவின் நிறு​வனத்​திலிருந்து 4,500 கிலோ நெய் கொள்​முதல் செய்​யப்​பட்டு நேற்று கோயிலுக்கு கொண்டு வரப்​பட்​டது.

தீபத் திரு​விழா கொடியேற்​றத்​துக்கு முன்​பாக ஊர்​காவல் தெய்​வ​மான துர்க்​கை​யம்​மன் உற்​சவம், பிடாரி அம்​மன் மற்​றும் விநாயகர் வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம்.

அதன்​படி, இன்று இரவு துர்​க்கை​யம்​மன் உற்​சவம், நாளை இரவு பிடாரி அம்​மன் உற்​சவம் நடை​பெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *