”3 நாட்களுக்கு உதகைக்கு வர வேண்டாம்” – நீலகிரி மாவட்ட ஆட்சியர் !!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருவதால் வெப்பநிலை குறைந்து உள்ளது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்படுள்ளது.

மேலும் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் வரும் 19 -ம் தேதி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர்.

அதேபோல் வரும் 20-ம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே 18 மற்றும் 19-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 20-ம் தேதி அதிகனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர்: அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்பதால் சுற்றுலா பயணிகள் பயணத்தை ஒத்திவைக்கும் படி நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது 3 நாட்களுக்கு உதகைக்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பயணத்தை திட்டமிடும்படி ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *