மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயருக்கு காங்கிரஸ சார்பில் முறைபடி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்பு சகோதரர் ராகுல் காந்தியை, அவரது புதிய பதவியுடன் ‘இந்தியா’ வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் என்று குறிப்பிட்டு வாழ்த்தினை பகிர்ந்து கொண்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *