”காலிறுதியில் போர்ச்சுகலை வீழ்த்திய பிரான்ஸ்” – விடைபெறுகிறார் ரொனால்டோ!!

யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியின் ஹாம்பெர்க் நகரில் வைத்து அனல் தெறிக்க நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் நேற்று நடந்த காலிறுதியில் பலப் பரீட்ச்சை செய்தன. 120 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2 அணிகளிலும் ஒரு கோல் கூட அடிக்காததால் வெற்றியை பெனால்டி மூலம் தீர்மானிக்க முடிவெடுக்கப்பட்டது.

பெனால்டி ஆட்டத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பெர்னார்டோ சிலவா, நினா மெண்டிஸ் ஆகோயோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆனால் பிரான்ஸ் 5 பெனால்டி கோல்களை விளாசி 5-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினுடன் பிரான்ஸ் மோத உள்ளது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இது கடைசி யூரோ சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் போர்ச்சுகல் தொடரில் இருந்து தற்போது வெளியேறியுள்ளது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. மைதானத்தில் உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டார்.

தோல்வியால் அழுத்த பெபேவுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக இந்த தொடரோடு யூரோ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரொனால்டோ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *