நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும் – துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!!

சென்னை:
மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றுள்ளனர். 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாட்டின் முன்னேற்றத்திற்காகவே மக்கள் தொகை கட்டுப்பாடு. தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து ஓரணியில் திரள்வது மகிழ்ச்சி. தென்னிந்தியாவின் தொகுதிகள் 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது. “நாட்டின் முன்னேற்றத்துக்காகவே மக்கள்தொகை கட்டுப்பாடு இருக்க வேண்டும், மக்கள்தொகையை கட்டுப்படுத்தியதற்காக, நமக்கு தரப்பட்ட பரிசுதான் இந்த தொகுதி மறுசீரமைப்பு என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *