இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி நள்ளிரவு 2.05 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : பூரம் மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருக்கண்ணபுரம், காட்டுபருவூர், அரியக்குடி கோவில்களில் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் தங்கப்புலி வாகனத்தில் பவனி.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் புறப்பாடு. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் அபிஷேகம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்சொல்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-பாசம்
கடகம்-அன்பு
சிம்மம்-மாற்றம்
கன்னி-இன்பம்
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-வெற்றி
தனுசு- முயற்சி
மகரம்-நன்மை
கும்பம்-கண்ணியம்
மீனம்-உதவி