2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்!

“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை வலிக்கிறதா?” – அண்மையில் தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படியொரு கேள்வியை எழுப்பினார்.

நெல்லை மாவட்​டத்​தி​லிருந்து 2019-ல் தென்​காசி மாவட்​டம் தனி​யாக பிரிக்​கப்​பட்​டது. இதையடுத்து தென்​காசி​யில் புதி​தாக கட்​டி​முடிக் கப்​பட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் 2 ஆண்​டு​களாக திறக்​க​முடி​யாமல் கிடப்​ப​தைத்​தான் இப்​படி காட்​ட​மாக சுட்​டிக்​காட்​டி​னார் பழனி​சாமி. ஆனால் தென்​காசி மக்​களைக் கேட்​டால், இது கதையே வேறல்​ல… என்று விரிக்​கி​றார்​கள்.

தென்​காசி மாவட்​டம் உதய​மாகி ஓராண்டு கழித்து தென்​காசி புதிய பேருந்து நிலை​யம் அருகே 11.11 ஏக்​கர் நில​மானது ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்ட தேர்​வுசெய்​யப்​பட்​டது. இந்த இடத்​தில் ரூ.119 கோடி மதிப்​பீட்​டில் ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்ட 10.12.2020-ல் அப்​போதைய முதல்​வர் இபிஎஸ் காணொலி வழியே அடிக்​கல் நாட்​டி​னார்.

இதையடுத்து கட்​டிடப் பணி​கள் தொடங்​கப்​பட்டு 2 ஆண்​டு​களுக்கு முன்​ன​தாக கட்​டு​மானப் பணி​கள் முடிவுக்கு வந்​தன. இருந்த போதும், நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தால் புதிய கட்​டிடத்தை பயன்​பாட்​டுக்கு திறக்​க​முடி​யாமல் இருக்​கிறது மாவட்ட நிர்​வாகம். இதனால், தென்​காசி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தின் முக்​கிய பிரி​வு​கள் பல்​வேறு இடங்​களில் தற்​காலிக கட்​டிடங்​களில் செயல்​பட்டு வரு​கின்​றன.

இந்த நிலை​யில் தான், தனது சுற்​றுப்​பயணத்​தின் போது, “இது அதி​முக ஆட்​சி​யில் அடிக்​கல் நாட்டி பணி​கள் தொடங்​கப்​பட்ட கட்​டிடம் என்​ப​தால் அவர்​கள் திறக்​க​மாட்​டார்​கள். அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் ஆட்​சி​யர் அலு​வலக கட்​டிடம் திறக்​கப்​பட்​டும்” என பொத்​தாம் பொது​வில் அள்​ளித் தெளித்​தார் இபிஎஸ்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய முன்​னாள் தென்​காசி தெற்கு மாவட்ட திமுக செய​லா​ளர் சிவபத்​ம​நாதன், “அதி​முக ஆட்​சி​யில் ஆட்​சி​யர் அலு​வல​கம் கட்​டு​வதற்கு முதலில் 3 குளங்​களுக்கு மத்​தி​யில் ஓர் இடத்​தைத் தேர்வு செய்​தனர்.

போக்​கு​வரத்து வசதி இல்​லாத அந்த இடத்​துக்கு பொது​மக்​கள் வந்து போவது சிரமம் என்​ப​தா​லும் குளங்​களால் சூழப்​பட்ட அந்​தப் பகு​தி​யில் கட்​டிடம் கட்​டி​னால் உறு​தி​யாக இருக்​காது என்​ப​தா​லும் திமுக கூட்​டணி கட்​சிகள் சார்​பில் போராட்​டங்​களை நடத்​தினோம். நான் நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தாக்​கல் செய்​தேன்.

இத்​தனைக்​கும் பிறகு​தான் புதிய பேருந்து நிலை​யம் பகு​தி​யில் மாற்று இடத்தை தேர்வு செய்​தார்​கள்.

ஆனால், அந்த இடத்​தில் கட்​டிடம் கட்​டு​வதற்கு மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம், சுற்​றுச்​சூழல் துறை உள்​ளிட்ட துறை​களில் முறை​யாக அனு​மதி பெறாமலே அடிக்​கல் நாட்டி கட்​டிடப் பணி​களை துவக்​கி​விட்​டார்​கள்.

இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தாக்​கலான​தால் கட்​டிடத்தை கட்​டி​முடித்​தும் திறக்​க​முடி​யாமல் இருக்​கிறது.

உண்மை இவ்​வாறு இருக்க, எடப்​பாடி பழனி​சாமி தனது இஷ்டத்​துக்கு பேசி திமுக மீது பழி சுமத்​தி​யதை நாங்​கள் வன்​மை​யாகக் கண்​டிக்​கி​றோம்” என்​றார்.

தென்​காசி தெற்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரான செல்​வ​மோகன் தாஸ் பாண்​டிய​னோ, “ஆட்​சி​யர் அலு​வலக கட்​டு​மான பணி​கள் எங்​கள் ஆட்​சி​யிலேயே 75 சதவீதம் முடிந்​து​விட்​டது. இன்​னும் சில மாதங்​கள் எங்​கள் ஆட்சி நீடித்​திருந்​தால் நாங்​களே கட்​டிடத்தை திறந்​திருப்​போம். ஆனால் திமுக ஆட்​சி​யில், தேவை​யில்​லாமல் கட்​டு​மானப் பணி​களை ஓராண்டு காலம் இழுத்​தடித்​தனர்.

அரசு கட்​டிடங்​களுக்கு கட்​டிட வேலை​களை ஆரம்​பித்த பிறகு தேவை​யான அனு​ம​தி​களை பெறு​வது வழக்​க​மான நடை​முறை​தான்.

சுற்​றுச்​சூழல் துறை அனு​மதி பெறா​விட்​டால் சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் சரி​யாக வேலை செய்​ய​வில்லை என்​று​தான் அர்த்​தம். அதி​காரி​களை சரி​யான முறை​யில் வேலை வாங்​காதது ஆட்​சி​யாளர்​களின் தவறு தானே?

பணி​களை முடித்து 2 ஆண்​டு​களாக அனு​மதி பெறாமலும், நீதி​மன்​றத்​தில் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்​காமல் இருப்​பதும் ஆளுங்​கட்​சி​யின் இயலாமை தானே? அதைத்​தான் எடப்​பாடி​யார் சுட்​டிக்​காட்​டி​னார்” என்​றார்.

“உன்​னால் தான் நின்னு போச்சு என ஒரு​வரை மாற்றி ஒரு​வர் இனி​யும் குற்​றம் சொல்​லிக்​கொண்​டிருக்​காமல், கட்​டி​முடிச்ச ஆட்​சி​யர் அலு​வல​கத்தை கூடிய சீக்​கிரம் திறக்​கப் பாருங்​கப்பா என்​கி​றார்​கள் தென்​காசி மாவட்ட மக்​கள்​!

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *