மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாகப் பாய்ந்தோடும் தண்ணீர்!!

மேட்டூர்:
சேலம் மாவட்​டத்​தில் உள்ள மேட்​டூர் அணை கட்​டப்​பட்டு 91 ஆண்​டு​கள் நிறைவடைந்​து, 92-வது ஆண்​டில் நேற்று அடியெடுத்து வைத்​தது. கர்​நாடக மாநிலத்​தில் உற்​பத்​தி​யாகும் காவிரி ஆறு தமிழகம் வழி​யாகச் சென்று கடலில் கலக்​கிறது.

கர்​நாடக மாநிலத்​தில் குறைந்த அளவு பகு​தி​களில் பாயும் காவிரி ஆறு, தமிழகம வழி​யாக 700 கிலோமீட்​டர் தொலைவு பயணித்​து, பூம்​பு​காரில் கடலில் கலக்​கிறது. பரு​வ​மழை​யின்​போது தண்​ணீரைத் தேக்க வழி​யின்றி விவ​சா​யிகள் வேதனை​யுற்​றனர்.

இதைக் கருத்​தில் கொண்​டு, அப்​போதைய ஆங்​கிலேய அரசு நீர்த்​தேக்​கத்​துக்​காக 1925-ல் மேட்​டூரில் அணை கட்​டும் பணி​யைத் தொடங்​கியது. வடிவ​மைப்பு மற்​றும் கண்​காணிப்பு பொறி​யாளர் கர்​னல் எல்​லீஸ் தலை​மை​யில் ஆயிரக்​கணக்​கான தொழிலா​ளர்​கள் அணை கட்​டு​மானப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

ஏறத்​தாழ 9 ஆண்​டு​கள் பணி நடை​பெற்​றது. 1934 ஜூலை 14-ம் தேதி அணை கட்​டு​மானப் பணி முழு​மை​யாக நிறைவடைந்​தது. மேட்​டூர் அணை கட்​டு​வதற்​காக அப்​போது செல​விடப்​பட்ட தொகை ரூ.4.80 கோடி. 1934 ஆகஸ்ட் 21-ம் தேதி அப்​போது சென்னை கர்​னலாக இருந்த ஜார்ஜ் பிரெட்​ரிக் ஸ்டான்லி அணை​யைத் திறந்​து​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.

மேட்​டூர் அணை​யில் இருந்து திறக்​கப்​படும் தண்​ணீர் மூலம், சேலம், கரூர், திருச்​சி, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் 17 லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி​யைப் பெறுகின்​றன. மேட்​டூர் அணை நீளம் 5,300 அடி​யாகும்.

அணை​யின் நீர்த்​தேக்​கப் பகுதி 59.25 சதுர மைலாகும். அணை​யில் 120 அடி உயரத்​துக்​கு, 93.5 டிஎம்சி தண்​ணீரைத் தேக்​கிவைக்க முடி​யும். அணை​யின் மேல்​மட்ட மற்​றும் கீழ் மட்ட மதகு​கள் மட்​டுமின்​றி, உபரி நீர் போக்​கி​யாக 16 கண் மதகு​கள் மூலம் தண்​ணீரை வெளி​யேற்​றலாம். 16 கண் மதகுக்கு மேட்​டூர் அணை​யின் கட்​டு​மான கண்​காணிப்​புப் பொறி​யாள​ராக இருந்த கர்​னல் எல்​லீஸ் கால்​வாய் என்று பெயரிடப்​பட்​டுள்​ளது.

பொது​வாக ஜூன் 12-ம் தேதி பாசனத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​படும். இது​வரை 20 முறை ஜூன் 12-ம் தேதி தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. உரிய தேதிக்கு முன்​ன​தாக 11 முறை​யும், கால​தாமத​மாக 61 ஆண்​டு​களும் பாசனத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 40,750 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 30,850 கனஅடி​யாக சரிந்​தது

. அணை​யில் இருந்து காவிரி​யில் 30,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு 750 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. அணை நீர்​மட்​டம் 2-வது நாளாக நேற்​றும் 120 அடி​யாக நீடித்​தது. நீர் இருப்பு 93.47 டிஎம்​சி.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *