டெல்லி குண்டு வெடிப்பை நிகழ்த்த நேபாளத்தில் செல்போனும் ,  உ பி யில் சிம் கார்டும் வாங்கிய பயங்கரவாதிகள்…

புதுடெல்லி: 

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த புதிய தகவல்​கள் என்னவெனில் ;

டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர். மேலும் 17 சிம் கார்​டு​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இதில் 6 சிம் கார்​டு​களை உ.பி.​யின் கான்​பூரில் வாங்​கி​யுள்​ளனர்.

குண்டு வெடிப்பை நிகழ்த்​திய உமர் நபி​யுடன் குண்டு வெடிப்​புக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை பர்​வேஸ், முகமது ஆரிப், பரூக் அகமது தார் ஆகிய 3 மருத்​து​வர்​கள் தொடர்​பில் இருந்​துள்​ளனர்.

இவர்​களில் பர்​வேஸ் என்​பவர், டெல்லி குண்​டு​வெடிப்பு வழக்​கில் கைது செய்​யப்​பட்ட மருத்​து​வர் ஷாகின் சயீ​தின் சகோ​தரர். இவர், லக்​னோ​வில் உள்ள இன்​டெக்​ரல் பல்​கலைக்​கழகத்​தில் உதவிப் பேராசிரிய​ராக உள்​ளார்.

முகமது ஆரிப், கான்​பூரில் உள்ள அரசு ஜிஎஸ்​விஎம் மருத்​து​வக் கல்​லூரி​யில் முதலா​மாண்டு டிஎம் (இதய​வியல்) மாணவர். இவர் கடந்த வெள்​ளிக்​கிழமை கைது செய்​யப்​பட்​டார். மூன்​றாவது மருத்​து​வ​ரான பரூக் அகமது தார், ஜி.எஸ். மருத்​து​வக் கல்​லூரி​யில் உதவிப் பேராசிரிய​ராக உள்​ளார்.

டெல்லி குண்​டு​வெடிப்​புக்காக அக். 2 -ம் தேதி திட்​ட​மிடலை தொடங்​கிய உமர் அக்​டோபர் 28-ம் தேதி இறுதி செய்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *