தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!

சென்னை:
தி.மு.க. சார்பில் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள் ஆகியவை முப்பெரும் விழாவாக வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் கரூரில் தி.மு.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்தும் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.


இந்நிலையில் காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *