சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மல்லிகைப்பூவின் மருத்துவப் பயன்கள்!!

பொதுவாக, மல்லிகைப்பூ என்றால் அதன் நறுமணமும், பெண்களின் கூந்தலுக்கு அது தரும் அழகும் மட்டுமே நினைவுக்கு வரும்.

ஆனால், இந்த பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது. முறையாக பயன்படுத்தினால், இது பல உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும். மல்லிகைப்பூவின் சில முக்கிய ஆரோக்கியப் பயன்களை இங்கே காணலாம்.

வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும்: வயிற்றில் பூச்சிகள் இருந்தால், உடல் எடை குறைவதுடன், சருமத்தில் வெள்ளை நிறத் திட்டுகளும் தோன்றும்.

இந்த பிரச்சனைக்கு, 4 மல்லிகைப் பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தினால், குடலில் உள்ள நாடாப் புழு மற்றும் கொக்கிப் புழு போன்ற ஒட்டுண்ணிகள் அழியும்.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்: மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, அதை தண்ணீரில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது.

வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும்: வயிற்றில் புண் இருந்தால், அதன் அறிகுறியாக வாய்ப்புண் ஏற்படலாம்.

இதை சரிசெய்ய, மல்லிகை பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாக சுண்டிய பிறகு வடிகட்டி, காலை மற்றும் மாலை என இருவேளை அருந்தி வரலாம். இது வாய்ப்புண் மற்றும் வயிற்று புண் ஆகிய இரண்டையும் குணப்படுத்த உதவும்.

மல்லிகை பூவின் எண்ணெயும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பூக்களை மருத்துவ பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் முன், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *