மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!!

சென்னை:
சென்னை மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார்.

சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களில் பெய்​யும் மழை​யின் அளவு, சுரங்​கப் பாதைகளில் போக்​கு​வரத்​து, மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட கால்​வாய்​களில் நீர்​மட்​டம், ஆறுகள் கடலுடன் கலக்​கும் முகத்​து​ வாரத்​தில் உள்ள நில​வரம் குறித்து 24 மணி நேர​மும் கண்​காணித்து நடவடிக்​கைகள் மேற்​கொள்ள மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் அமைக்​கப்​பட்டு செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பல்​வேறு பகு​தி​களில் ஆய்வு மேற்​கொண்ட துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் செயல்​பட்டு வரும் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையத்​தில் நேற்று அதி​காலை திடீர் ஆய்வு மேற்​கொண்டார்.

அப்​போது கட்​டுப்​பாட்டு அறைக்கு 1913 தொலைபேசி மூல​மாக வந்த புகார்​கள், சமூக வலை​தளங்​கள் மூல​மாக பெறப்பட்ட புகார்​களின் விவரங்​கள், அதன் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து ஆய்வு செய்​தார்.

தொடர்ந்து புகார்​தா​ரர்​கள் அனுப்​பிய புகைப்​படங்​கள், வீடியோக்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்ள எடுத்​துக்​கொள்​ளப்​பட்ட கால​நேரம், சீரமைப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது குறித்து புகார்​தா​ரர் தெரி​வித்த கருத்​துகள் ஆகிய​வற்றை கணினி​யில் பார்​வை​யிட்​டு, சமூக வலைதள புகார்​களை கையாளும் பணி​யாளர்​களிடம் கலந்​துரை​யாடி​னார்.

மழை அதி​கள​வில் பெய்​கிற​தா, வெவ்​வேறு சுரங்​கப்​பாதைகளில் போக்​கு​வரத்து சீராக நடை​பெறுகிறதா என்​பதை கண்​காணிப்பு கேம​ராக்​கள் மூல​மும் ஆராய்ந்​தார்.

அதே​போல் கட்​டுப்​பாட்டு அறை​யில் சுழற்சி முறை​யில் பணிபுரி​யும் பணி​யாளர்​களின் எண்ணிக்கை குறித்​தும், பணி​யாளர்​கள் மேற்​கொள்​ளும் பணி​கள் குறித்​தும் அலு​வலர்​களிடம் கேட்​டறிந்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *