ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு!!

கோவை:
ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – உத்​தர பிரதேசம் அணி​கள் இடையி​லான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வரு​கிறது.

தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 81.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 282 ரன்​கள் எடுத்​தது.

பாபா இந்​திரஜித் 128 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழ்​நாடு அணி 136.3 ஓவர்​களில் 455 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

பாபா இந்​திரஜித் 188 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 149 ரன்​கள் விளாசி கார்த்​திக் யாதவ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். குரு​சாமி அஜிதேஷ் 86, சோனது யாதவ் 44 ரன்​கள் சேர்த்​தனர்.

உத்​தர பிரதேச அணி சார்​பில் கார்த்​திக் யாதவ் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். இதையடுத்து பேட் செய்த உத்​தர பிரதேச அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 33 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 87 ரன்​கள் எடுத்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *