பெண்​கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்​பாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை!!

சென்னை:
பெண்​கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்​பாக அதி​முக முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு மகளிர் ஆணை​யம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு உயர் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

விழுப்​புரத்​தில் சில மாதங்​களுக்கு முன்பு நடந்த அதி​முக பூத் கமிட்டி கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்சர் சி.​வி. சண்முகம் எம்​.பி., பெண்​கள் குறித்து சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதுதொடர்​பாக சென்​னையை சேர்ந்த பிரமிளா, ராதிகா ஆகியோர் கொடுத்த புகாரின்​பேரில் விசா​ரணை மேற்​கொண்ட மாநில மகளிர் ஆணை​யம், சி.​வி.சண்​முகத்​துக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்கை எடுக்​கு​மாறு டிஜிபிக்கு கடந்த நவ.11-ம் தேதி உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவர் மனு தாக்​கல் செய்​தார். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா முன்பு இந்த மனு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நடந்த வாதம்:

சி.​வி.சண்​முகம் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள் முகமது ரியாஸ், சி.அய்​யப்​ப​ராஜ்: மனு​தா​ரருக்கு மாநில மகளிர் ஆணை​யம் அனுப்​பிய சம்​மனில், புகார் கொடுத்த 2 பெண்​களின் பெயர்​களைத் தவிர வேறு எந்த விவரங்​களும், ஆதா​ரங்​களும் தெரிவிக்​கப்​பட​வில்​லை.

மனு​தா​ரர் கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக சென்​னை​யில் எந்த கூட்​டத்​தி​லும் பங்​கேற்று பேசாத நிலை​யில், சென்​னையை சேர்ந்த பெண்​கள் கொடுத்த புகாரின்​பேரில் மகளிர் ஆணை​யம் உத்​தர​விட்​டது ஏற்​புடையதல்ல. பெண்​களுக்கு எதி​ராக அவர் ஒரு​போதும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேச​வில்​லை.

கடந்த அக்​.28-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு அனுப்​பிய சம்​மன் முந்​தைய நாள்​தான் கிடைத்​தது. மனு​தா​ரருக்கு எதி​ராக குற்​ற​வியல் வழக்கு பதிவு செய்​யு​மாறு உத்​தர​விட மகளிர் ஆணை​யத்​துக்கு அதி​காரம் கிடை​யாது.

காவல் துறை தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் கேஎம்​டி. முகிலன்: மகளிர் ஆணை​யம் இதுதொடர்​பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ள​தால், இந்த மனு விசா​ரணைக்கு உகந்​தது அல்ல.

இதுதொடர்​பான விவரங்​களைப் பெற்று சரி​பார்க்க வேண்டி இருப்​ப​தால் உரிய அவகாசம் வழங்க வேண்​டும்.

இவ்​வாறு வாதம் நடந்​தது. இதையடுத்து, மகளிர் ஆணை​ய உத்​தர​வுக்கு நீதிப​தி இடைக்​காலத் தடை விதித்​தார்.

காவல் துறை தரப்​பில் பதில் அளிக்க உத்​தர​விட்​டு, விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்​ளி​வைத்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *