சென்னை எழும்​பூர் – ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை அடுத்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது!!

சென்னை:
சென்னை எழும்​பூர் – ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெற்கு ரயில்​வே​யில் சென்னை சென்ட்​ரல் – மைசூரு, சென்னை சென்ட்​ரல்- கோவை, சென்னை சென்ட்​ரல் -விஜய​வா​டா, எழும்​பூர் – திருநெல்​வேலி, எழும்​பூர் – நாகர்​கோ​வில் வந்தே பாரத் ரயில் உட்பட 10-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

மற்ற விரைவு ரயில்​களை காட்​டிலும் வந்தே பாரத் ரயில் வேக​மாக​வும், சொகு​சாக​வும் இருப்​ப​தால், பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

மேலும், பல வழித் தடங்​களில் வந்தே பாரத் ரயில்​களை இயக்க வலி​யுறுத்​தி, ரயில்வே அமைச்​சகத்​துக்கு கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

அந்​த வகை​யில், எழும்​பூர் – ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

இந்​துகளின் புனித தலமான ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமி கோயிலுக்கு வெளி​மாநிலங்​களில் இருந்து அதிக அளவில் பக்​தர்​கள் வந்து செல்​வ​தால், அவர்​களின் போக்​கு​வரத்து வசதியை அதி​கரிக்​கும் வகை​யில் வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை வைக்​கப்​பட்​டது.

இதன்​பேரில், சென்னை எழும்​பூர் – ராமேசுவரம் வழித்​தடத்​தில் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரி​யம் முடிவு செய்​துள்​ளது.

இந்த வந்தே பாரத் ரயிலுக்​கான தற்​காலிக நேர அட்​ட​வணையை ரயில்வே நிர்​வாகம் வெளி​யிட்​டுள்​ளது. இந்த ரயில் வாரத்​தில் புதன்​கிழமை தவிர 6 நாட்​கள் இயக்​கப்பட உள்​ளது.

சென்னை எழும்​பூரில் இருந்து அதி​காலை 5.30 மணிக்​குப் புறப்​பட்​டு, திருச்​சி, காரைக்​குடி வழி​யாக ராமேசுவரத்தை அதே​நாள் மதி​யம் 1.15 மணிக்கு அடை​யும்.

இந்த ரயில் தாம்​பரத்​தில் அதி​காலை 5.50 மணிக்​கும், விழுப்​புரம் சந்​திப்​பில் காலை 7.18 மணிக்​கும், திருச்சி சந்​திப்​பில் காலை 9.15 மணிக்​கும், புதுக்​கோட்​டை​யில் காலை 9.58 மணிக்​கும், காரைக்​குடி சந்​திப்​பில் காலை 10.38 மணிக்​கும், சிவகங்​கை​யில் முற்​பகல் 11.13 மணிக்​கும், ராம​நாத​புரத்​தில் நண்​பகல் 12.13 மணிக்​கும் நின்​றுசெல்​லும்.

மறு​மார்க்​க​மாக ராமேசுவரத்​தில் இருந்து பிற்​பகல் 2.30 மணிக்கு புறப்​பட்டு அதே​நாள் இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்​பூரை வந்​தடை​யும். இந்த ரயில் ராம​நாத​புரத்​தில் பிற்​பகல் 3.13 மணிக்​கும், சிவகங்​கை​யில் மாலை 4.08 மணிக்​கும், காரைக்​குடி சந்​திப்​பில் மாலை 4.38 மணிக்​கும், புதுக்​கோட்​டை​யில் மாலை 5.08 மணிக்​கும், திருச்சி சந்​திப்​பி்ல மாலை 6.05மணிக்​கும், விழுப்​புரம் சந்​திப்​பில்இரவு 8.13 மணிக்​கும் நின்று செல்​லும். இந்​த ர​யில் சேவையை பிரதமர் மோடி அடுத்த மாதம் மத்​தி​யில்​ அல்​லது இறு​தி​யில்​ திறந்​து வைப்​பார்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *